Together, with everyone’s efforts, we will build a Viksit Bharat and a Viksit Uttar Pradesh: PM Modi in Greater Noida

September 25th, 10:22 am

In his address while inaugurating the Uttar Pradesh International Trade Show 2025, PM Modi emphasized that Antyodaya means ensuring development reaches even the poorest. Underscoring the principle of “Platforms for All, Progress for All”, the PM remarked that the impact of platforms is visible across India. He noted that UP ranks first in heritage tourism, highlighting that investing in India and particularly in UP is a win-win situation.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்

September 25th, 10:00 am

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அசாம் மாநிலம் தாரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

September 14th, 11:30 am

பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே! அசாமின் பிரபல முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்த சோனாவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர அரசு பிரதிநிதிகளே, தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே எங்களை ஆசிர்வதிக்க பெருமளவில் குழுமியுள்ள எனது சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்,

அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

September 14th, 11:00 am

இந்தியா தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். அதேபோல, அஸ்ஸாம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அஸ்ஸாம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியதாகவும், நாட்டின் பிற பகுதிகளுடன் வேகத்தை பராமரிக்க போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், இன்று, அஸ்ஸாம் கிட்டத்தட்ட 13 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் முன்னேறி வருகிறது. இதை ஒரு பெரிய சாதனையாகக் குறிப்பிட்ட திரு மோடி, அஸ்ஸாம் மக்களின் கடின உழைப்பும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார். அஸ்ஸாம் மக்கள் இந்தக் கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைப்பதிலும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் பங்கை பிரதமர் பாராட்டினார்.

September 04th, 09:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, இந்தியாவின் நிதி கட்டமைப்பையும் உலகளாவிய நிலையையும் மாற்றியமைத்த, மத்திய அரசின் ஒரு தசாப்த கால துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். முதலீட்டை ஊக்குவித்த பெரு நிறுவனங்கள் வரி குறைப்பிலிருந்து, தேசிய சந்தையை ஒருங்கிணைத்த ஜிஎஸ்டி அமலாக்கம், மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் வரை, இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகவும், மக்கள் மையமாகவும் இருந்துள்ளன.

இந்தியாவின் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றம் தரும் தாக்கம் பற்றி பிரதமர் விவரித்துள்ளார்

September 04th, 09:01 pm

இந்தியாவின் பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றம் தரும் தாக்கம் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி விவரித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையலுக்கான அத்தியாவசியப் பொருட்கள், புரதச்சத்து நிறைந்தப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி குறைப்பின் மூலம் இந்த சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் நிலை மற்றும் உணவு அணுகலை மேம்படுத்துவதில் நேரடியாக பங்களிக்கும்.

'2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு' என்ற இலக்கை வலியுறுத்தி, நிதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதியை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்

September 04th, 08:55 pm

அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி கிடைப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி (#NextGenGST) சீர்திருத்தங்களின் சமீபத்திய கட்டம், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் அவை ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவானதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாறியுள்ளன.

இந்தியாவின் நடுத்தர வகுப்பினருக்கு ஆதரவளிப்பதில் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

September 04th, 08:53 pm

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தின் பின்னணியில் ஊக்க சக்தியாக நீடிக்கும் இந்தியாவின் நடுத்தர வகுப்பிற்கு ஆதரவளிக்கும் அரசின் தீவிரமான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் உற்பத்தித் துறையில் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

September 04th, 08:49 pm

இந்தியாவின் உற்பத்தித் துறையில் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மாற்றகரமான தாக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். எளிமைப்படுத்தப்பட்ட வரி அடுக்குகள், சீரமைக்கப்பட்ட டிஜிட்டல் இணக்கம் மற்றும் கட்டண செயல்திறன்கள் முதலியவற்றை அறிமுகப்படுத்தியுள்ள அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக ஊக்குவித்து, போட்டித் தன்மையை மேம்படுத்த உள்ளன.

அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரமளித்து, ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன: பிரதமர்

September 04th, 08:43 pm

ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்குவதிலும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊரகப் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்காக ஜிஎஸ்டி கவுன்சிலுக்குப் பிரதமர் பாராட்டு

September 03rd, 11:00 pm

மத்திய அரசு சமர்ப்பித்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பு, சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளுக்கு மத்திய, மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாக ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எனவும், குறிப்பாக சிறு வணிகர்களுக்கும், தொழில்களுக்கும் வணிகம் செய்வதை இது எளிதாக்கும் என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்ற வாகனத்துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் இயக்க முன்முயற்சி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 27th, 06:30 pm

முதலாவதாக, நான் இங்கு வரத் தாமதித்து, உங்களை காத்திருக்க வைத்ததற்காக உங்கள் அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று காலை திட்டமிட்டபடி தில்லியில் இருந்து புறப்பட்டேன். ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இங்கு வந்ததால் தாமதம் ஏற்பட்டு விட்டது.

மதுரையில் நடைபெற்ற 'எதிர்காலத்தை உருவாக்குதல் – வாகனத் தொழிலில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் இயக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

February 27th, 06:13 pm

தமிழ்நாட்டின் மதுரையில் இன்று நடைபெற்ற 'வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் – டிஜிட்டல் இயக்கம்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, வாகனத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றினார். காந்திகிராமத்தில் பயிற்சி பெற்ற பெண் தொழில்முனைவோர் மற்றும் பள்ளி மாணவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

Our policy-making is based on the pulse of the people: PM Modi

July 08th, 06:31 pm

PM Modi addressed the first ‘Arun Jaitley Memorial Lecture’ in New Delhi. In his remarks, PM Modi said, We adopted the way of growth through inclusivity and tried for everyone’s inclusion. The PM listed measures like providing gas connections to more than 9 crore women, more than 10 crore toilets for the poor, more than 45 crore Jan Dhan accounts, 3 crore pucca houses to the poor.

PM Modi addresses the first "Arun Jaitley Memorial Lecture" in New Delhi

July 08th, 06:30 pm

PM Modi addressed the first ‘Arun Jaitley Memorial Lecture’ in New Delhi. In his remarks, PM Modi said, We adopted the way of growth through inclusivity and tried for everyone’s inclusion. The PM listed measures like providing gas connections to more than 9 crore women, more than 10 crore toilets for the poor, more than 45 crore Jan Dhan accounts, 3 crore pucca houses to the poor.

டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் 6 ஆண்டு நிறைவு தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

July 01st, 11:01 am

எனது அமைச்சரவை தோழர்கள் திரு ரவி சங்கர் பிரசாத், திரு சஞ்சய் தோத்ரே மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வணக்கம்! டிஜிட்டல் இந்தியா இயக்கம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

“டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

July 01st, 11:00 am

”டிஜிட்டல் இந்தியா” தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கு மூலம் “டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் கலந்துரையாடினார். மத்திய மின்னணுவியல் மற்றும் ஐடி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் மற்றும் கல்வி இணையமைச்சர் திரு சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோரும் இந்த காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவுக்கு பிரதமர் பாராட்டு

June 30th, 02:39 pm

ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Cabinet clears pension scheme for traders

May 31st, 09:02 pm

India has a rich tradition of trade and commerce. Our traders continue to make a strong contribution to India’s economic growth.

PM Modi addresses public meeting in Churu, Rajasthan

February 26th, 02:07 pm

Prime Minister Narendra Modi addressed a huge public meeting in Churu district of Rajasthan today. Addressing the gathering, PM Modi said that the country is in safe hands and that he belongs to a party for which the country is the most important, much more than the party and the self.