உலக மரியாதை சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியை கௌரவித்த இந்த 29 நாடுகள் - அதற்கான காரணம் இங்கே!

July 07th, 04:59 pm

குவைத், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பிற நாடுகளின் தலைவர்கள் இந்தியப் பிரதமருக்கு தங்கள் மிக உயர்ந்த சிவிலியன் கௌரவங்களை வழங்கும்போது, ​​அது இராஜதந்திர மரியாதையை விட அதிகமாக பிரதிபலிக்கிறது. இது ஒரு நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கு, மதிப்புகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்தைக் குறிக்கிறது.

நைஜீரியாவில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 17th, 07:20 pm

எனக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்புக்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று நேரத்திற்கு முன்பு, அதிபர் டினுபு நைஜீரியாவின் தேசிய விருதை எனக்கு வழங்கி கௌரவித்தார். இந்த கௌரவம் மோடிக்கு மட்டுமல்ல; இது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், இங்குள்ள இந்திய சமூகத்தினரான உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்த கவுரவத்தை உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நைஜீரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

November 17th, 07:15 pm

பிரதமராக நைஜீரியாவுக்கு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று கூடியிருந்தவர்களிடம் தெரிவித்த திரு மோடி, கோடிக்கணக்கான இந்தியர்களின் நல்வாழ்த்துகளை தம்முடன் சேர்த்துக் கொண்டதாகவும் கூறினார். நைஜீரியாவில் இந்தியர்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருதை தமக்கு வழங்கியதற்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் நன்றி தெரிவித்த திரு மோடி, இந்த விருதை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அர்ப்பணித்தார்.