தில்லியில் சிலி அதிபர் திரு கேப்ரியல் போரிக் ஃபாண்டை பிரதமர் வரவேற்றார்

April 01st, 09:33 pm

தில்லியில் சிலி அதிபர் திரு கேப்ரியல் போரிக் ஃபாண்டை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். இது இந்தியா-சிலி கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. அதிபர் போரிக்கை உபசரிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த திரு மோடி, லத்தீன் அமெரிக்காவில் சிலி முக்கிய நட்பு நாடாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சிலி அதிபரின் இந்திய அரசுமுறைப் பயண நிகழ்ச்சிகள் : ஏற்பட்ட பலன்கள்

April 01st, 06:45 pm

அண்டார்டிகா ஒத்துழைப்பு குறித்த உத்தேச ஒப்புதல் ஆவணம், இந்தியா – சிலி கலாச்சார பரிமாற்ற திட்டம், பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புக்கான தேசிய சேவை, பேரிடர் மேலாண்மை குறித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், கோடெல்கோ மற்றும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தியா - சிலி கூட்டறிக்கை

April 01st, 06:11 pm

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சிலி குடியரசின் அதிபர் மேதகு திரு. கேப்ரியல் போரிக் ஃபாண்ட் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், 2025 ஏப்ரல் 1 முதல் 5 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு போரிக் அவர்களுடன் வெளியுறவு, விவசாயம், சுரங்கம், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய துறைகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான வர்த்தகத் தலைவர்கள் வந்துள்ளனர். புதுதில்லி தவிர, ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூருவுக்கு அதிபர் திரு போரிக் செல்கிறார். அதிபர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அதிபர் திரு போரிக் மற்றும் பிரதமர் திரு மோடி இருவரும் 2024 நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த

சிலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:36 pm

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, சிலி குடியரசின் அதிபர் திரு. கேப்ரியல் போரிக் ஃபோன்ட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார். இதுதான் அவர்களின் முதல் சந்திப்பாகும்.