Young karmayogis will lead the journey towards a developed India: PM Modi during Rozgar Mela

October 24th, 11:20 am

In his Rozgar Mela address, PM Modi congratulated the newly employed youth and emphasized that today’s appointments are opportunities to actively contribute to nation-building. Highlighting that happiness has reached over 51,000 youth across the country today, he noted that more than 11 lakh appointment letters have been issued through Rozgar Melas in recent times. He also highlighted the utility of the ‘i-Got Karmayogi Bharat Platform’ in their journey.

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 24th, 11:00 am

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும். இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்திருப்பதாக திரு மோடி கூறினார். அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும் என்று கூறிய அவர், நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு

September 03rd, 08:40 pm

ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜோஹன் வதேபுல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். “இந்தியாவும் ஜெர்மனியும் உத்திசார் கூட்டு முயற்சியின் வெள்ளி விழாவைக் கொண்டாடுகின்றன. துடிப்பான ஜனநாயகங்களாகவும், முன்னணி பொருளாதாரங்களாகவும், வர்த்தகம், தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர நலன் பயக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அபரிமிதமான சாத்திய கூறுகளை நாங்கள் காண்கிறோம்”, என்று திரு மோடி தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு

August 29th, 08:12 pm

நமது பகிரப்பட்ட மதிப்புகளிலும் பரஸ்பர மரியாதையிலும் உறுதியாக அடித்தளமிடப்பட்டுள்ள இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பாதுகாப்பையும் செழிப்பையும் அதிகரிக்க மிகவும் முக்கியமானது. பொருளாதார பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு என்பது நமது உத்திசார் கண்ணோட்டத்தில் வெளிப்படும் முக்கிய தூணாகும்.

பயிற்சி முடித்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள், பிரதமருடன் சந்திப்பு

August 19th, 08:34 pm

2024-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் பயிற்சி முடித்த அதிகாரிகள் தில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 33 இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

சீன வெளியுறவு அமைச்சர் திரு வாங் யி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு

August 19th, 07:34 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான திரு. வாங் யியை இன்று சந்தித்தார்.

டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 28th, 08:00 pm

டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 28th, 06:53 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast

March 16th, 11:47 pm

PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.

பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

March 16th, 05:30 pm

லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்

இந்தியா - கத்தார் கூட்டறிக்கை

February 18th, 08:17 pm

இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

We are not just the Mother of Democracy; democracy is an integral part of our lives: PM

January 09th, 10:15 am

PM Modi inaugurated the 18th Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar, Odisha. Expressing his heartfelt gratitude to the Indian diaspora and thanking them for giving him the opportunity to hold his head high with pride on the global stage, Shri Modi highlighted that over the past decade, he had met numerous world leaders, all of whom have praised the Indian diaspora for their social values and contributions to their respective societies.

ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 09th, 10:00 am

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.

ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)

October 28th, 06:32 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.

இந்தியா மற்றும் மாலத்தீவுகள்: விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு பார்வை

October 07th, 02:39 pm

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு ஆகியோர், 2024 அக்டோபர் 7 அன்று சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் விரிவாக மதிப்பாய்வு செய்தனர், அதே நேரத்தில், இரு நாடுகளின் மக்களின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களித்த வரலாற்று ரீதியாக நெருக்கமான மற்றும் சிறப்பு உறவை ஆழப்படுத்துவதில் இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்டனர்.

மாலத்தீவு அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம் (அக்டோபர் 7, 2024)

October 07th, 12:25 pm

இந்தியாவும், மாலத்தீவும் பல நூற்றாண்டுகளாக நீடித்த உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

2023 தொகுப்பைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்

August 29th, 06:35 pm

பிரதமரின் தலைமையின் கீழ், வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியைப் பாராட்டிய பயிற்சி அதிகாரிகள், எதிர்வரும் புதிய பணிகள் குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கேட்டறிந்தனர். நாட்டின் கலாச்சாரத்தை எப்போதும் தங்களுடன் பெருமிதத்துடனும், கண்ணியத்துடனும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட நடத்தை உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காலனித்துவ மனநிலையை வென்று, அதற்கு பதிலாக நாட்டின் பெருமைமிக்க பிரதிநிதிகளாக தங்களை முன்னெடுத்துச் செல்வது பற்றி அவர் பேசினார்.

போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

August 21st, 09:07 am

போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.

திரு. நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

August 11th, 08:17 am

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை

July 04th, 01:29 pm

2017-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் கஜகஸ்தான் இருந்தபோது உறுப்பினராக சேர்க்கப்பட்டதை இந்தியா பாராட்டுதலுடன் நினைவு கூர்கிறது. அதிலிருந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு சுற்று தலைமைப் பொறுப்புகளை நாம் நிறைவு செய்துள்ளோம். 2020-ம் ஆண்டில் அரசுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும், 2023-ம் ஆண்டில் நாட்டுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும் இந்தியா நடத்தியது. எங்களது வெளியுறவுக் கொள்கையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.