உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் வாழ்த்து

December 31st, 09:04 am

தோஹாவில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே-வின் (FIDE) உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.12.2025) வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஃபிடே ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறிது நேரத்திலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது உலக செஸ் அரங்கில் இந்தியாவிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணமாகும்.