விரைவு சிறப்பு நீதிமன்றங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
November 29th, 03:53 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 01.04.2023-ம் ஆண்டு முதல் 31.03.2026 வரை ரூ.1952.23 கோடி (மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி மற்றும் மாநில அரசின் பங்காக ரூ.744.99 கோடி) மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாக விரைவு சிறப்பு நீதிமன்றத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்பயா நிதியில் இருந்து மத்திய அரசின் பங்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் 02.10.2019 அன்று தொடங்கப்பட்டது.