India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi

September 12th, 04:54 pm

In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.

புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

September 12th, 04:45 pm

புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ஹன்சால்பூரில் பசுமை போக்குவரத்து வாகனத் திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 26th, 11:00 am

மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு கீச்சி ஒனோ சான் அவர்களே, சுசுகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசுகி சான் அவர்களே, மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹிசாஷி தக்கூச்சி சான் அவர்களே, தலைவர் ஆர் சி பார்கவா அவர்களே, ஹன்சால்பூர் தொழிற்சாலையின் ஊழியர்களே, சிறப்புமிக்க பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

குஜராத்தின் ஹன்சல்பூரில் பசுமை இயக்கம் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

August 26th, 10:30 am

குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பசுமை இயக்க முயற்சிகளைத் தொடங்கி வைத்தார். பசுமை எரிசக்தித் துறையில் தன்னிறைவை எட்டும் வகையில், பெரிய முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கு இது உதவும். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், கணேஷ் உத்சவத்தின் பண்டிகை உற்சாகத்தின் மத்தியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இது இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம் என்ற பகிரப்பட்ட இலக்கை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்குச் சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று திரு. மோடி தெரிவித்தார். நாட்டில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவுக்கும் இது ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருகிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜப்பானுக்கும், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பாரத் டெக்ஸ் 2025 வர்த்தகக் கண்காட்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 16th, 04:15 pm

எனது அமைச்சரவை சகாக்கள் திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு பபித்ர மார்கரிட்டா அவர்களே பல்வேறு நாடுகளின் மதிப்புமிகு துதர்களே, தூதரக மூத்த அதிகாரிகளே, மத்திய மாநில அரசு அதிகாரிகளே, ஆடை அலங்காரம் மற்றும் ஜவுளி உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே, தொழில்முனைவோர்களே, மாணவர்களே, எனதருமை நெசவாளர்களே, கைவினைக் கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 16th, 04:00 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது எனவும் இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றும் அவர் கூறினார். பாரத் டெக்ஸ் தற்போது ஒரு மெகா உலகளாவிய ஜவுளி நிகழ்வாக மாறி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பன்னிரண்டு பிரிவுகளும் இந்த முறை நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளன என்று அவர் கூறினார். உதிரிப்பாகங்கள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், சாயங்களின் கண்காட்சிகளும் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, ஒத்துழைப்புக்கான வலுவான தளமாக பாரத் டெக்ஸ் மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

The Genome India Project marks a defining moment in the country's biotechnology landscape: PM

January 09th, 06:38 pm

PM Modi delivered his remarks at the start of the Genome India Project. “Genome India Project is an important milestone in the biotechnology revolution”, exclaimed Shri Modi. He noted that this project has successfully created a perse genetic resource by sequencing the genomes of 10,000 inpiduals from various populations.

ஜீனோம்இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

January 09th, 05:53 pm

ஜீனோம்இந்தியா திட்டத்தை இன்று தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆராய்ச்சித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை இன்று எடுத்து வைத்துள்ளது என்று கூறினார். ஜீனோம்இந்தியா திட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கோவிட் பெருந்தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றி திட்டத்தை முடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த ஆராய்ச்சியில் ஐஐஎஸ்சி, ஐஐடி, சிஎஸ்ஐஆர் மற்றும் டிபிடி-பிரிக் போன்ற 20-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைகள் அடங்கிய தகவல்கள் தற்போது இந்திய உயிரியல் தரவு மையத்தில் உள்ளன என்றும் அவர் கூறினார். உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு மோடி, இத்திட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 26th, 11:11 pm

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர். மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது என்று திரு மோடி கூறினார். டாக்டர். மன்மோகன் சிங், எளிமையான பின்னணியிலிருந்து, பொருளாதார நிபுணராக உயர்ந்தார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நமது பிரதமராக, டாக்டர் மன்மோகன் சிங், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 08:34 am

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியின் புக்லியாவில் பிரதமர் மெலோனி தலைமையில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டை முன்னிட்டு சந்தித்தனர். இந்தச் சவாலான காலகட்டத்தில் ஜி-7 அமைப்பை வழிநடத்தியதற்காக பிரதமர் மெலோனியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

October 25th, 11:20 am

இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,

ஜமைக்கா பிரதமர் மேதகு டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னெஸின் இந்திய பயணத்தின் போது செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

October 01st, 12:30 pm

இந்தியாவுக்கும், ஜமைக்காவுக்கும் இடையே, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஜமைக்கா பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றின் மூலம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வெற்றிகரமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர்

July 22nd, 07:15 pm

பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலி பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு

June 14th, 11:40 pm

இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலியக் குடியரசின் பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன், திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, திருமதி மெலோனி வாழ்த்துத் தெரிவித்தார். ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுத்த இத்தாலிப் பிரதமர் திருமதி மெலோனிக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, வெற்றிகரமான உச்சிமாநாட்டின் நிறைவுக் குறித்து பாராட்டு தெரிவித்தார்.

PM Modi interacts with the Indian community in Paris

July 13th, 11:05 pm

PM Modi interacted with the Indian diaspora in France. He highlighted the multi-faceted linkages between India and France. He appreciated the role of Indian community in bolstering the ties between both the countries.The PM also mentioned the strides being made by India in different domains and invited the diaspora members to explore opportunities of investing in India.

இன்றைய தற்சார்பு இந்தியா தொகுப்பு சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் உதவும் அரசின் முயற்சியின் தொடர்ச்சி-பிரதமர்

November 12th, 10:29 pm

இன்று வெளியிடப்பட்ட தற்சார்பு இந்தியா தொகுப்பு, அனைத்து பிரிவினருக்கும் உதவுவதற்கான அரசின் முயற்சியின் தொடர்ச்சியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

We are focussing on making tax-paying seamless, painless, faceless: PM Modi

August 13th, 11:28 am

PM Narendra Modi rolled out a taxpayers charter and faceless assessment on Thursday as part of the government's effort to easing the compliance for assessees and reward the honest taxpayer. He also launched the Transparent Taxation - Honoring The Honest platform, in what he said will strengthen efforts of reforming and simplifying the country's tax system.

“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவரை கவுரவித்தல்” தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

August 13th, 10:27 am

“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

Prime Minister reviews “Project Arth Ganga” : Correcting imbalances; connecting people

May 15th, 08:43 pm

Prime Minister Shri Narendra Modi today reviewed the plans being envisaged for implementing “Project Arth Ganga”.

We are focusing on formalization and modernization of Indian economy: PM Modi

December 20th, 11:01 am

PM Modi addressed centenary celebrations of ASSOCHAM. He said it takes four words to say ‘Ease of Doing Business’, but rankings improve when the government and entire system works day in and out, by going to the grassroots level. The PM mentioned India as one of the most business friendly nations and cited the country stands at 63rd position in the Ease of Doing Business rankings.