Thanks to the efforts of India's fintech community, our Swadeshi solutions are gaining global relevance: PM Modi in Mumbai

October 09th, 02:51 pm

In his address at the Global Fintech Fest 2025, PM Modi remarked that over the past decade, India has successfully democratized technology. He emphasized that India has demonstrated how technology can serve not only as a tool of convenience but also as a means of equality. Highlighting that digital payments have become routine in India, the PM attributed this success to the JAM Trinity. He extended an invitation to every global partner to collaborate with India.

மும்பையில் உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025-ல் பிரதமர் உரையாற்றினார்

October 09th, 02:50 pm

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025ல் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு திருவிழாவில் கூட்டு நாடக இங்கிலாந்து பங்கேற்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இரண்டு முக்கிய ஜனநாயகங்களுக்கு இடையேயான கூட்டுமுயற்சி, உலகளாவிய நிதி சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். “இந்தியா தான் ஜனநாயகத்தின் அன்னை, இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல்கள் அல்லது கொள்கை வடிவமைப்புடன் மட்டுப்படுவதில்லை, மாறாக ஆளுகையின் வலிமையான தூணாக உருவாகி இருக்கிறது”, என்று அவர் கூறினார்.

Together, with everyone’s efforts, we will build a Viksit Bharat and a Viksit Uttar Pradesh: PM Modi in Greater Noida

September 25th, 10:22 am

In his address while inaugurating the Uttar Pradesh International Trade Show 2025, PM Modi emphasized that Antyodaya means ensuring development reaches even the poorest. Underscoring the principle of “Platforms for All, Progress for All”, the PM remarked that the impact of platforms is visible across India. He noted that UP ranks first in heritage tourism, highlighting that investing in India and particularly in UP is a win-win situation.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்

September 25th, 10:00 am

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் பல்வேறு மெட்ரோ திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்

August 10th, 01:30 pm

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!

கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் ₹22,800 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

August 10th, 01:05 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

குவைத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 21st, 06:34 pm

நான் இரண்டரை மணி நேரத்திற்கு முன்புதான் குவைத் வந்தேன். நான் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து, சுற்றிலும் ஒரு தனித்துவமான சொந்தம் மற்றும் அரவணைப்பை உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ஒரு சிறிய இந்துஸ்தான் எனக்கு முன்னால் உயிர் பெற்று வந்ததைப் போல உணர்கிறேன்.

குவைத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

December 21st, 06:30 pm

குவைத் நகரில் உள்ள ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குவைத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாட்டினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

December 16th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 21st, 02:15 am

எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு

November 21st, 02:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை

September 22nd, 10:00 pm

அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.

நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்

September 22nd, 09:30 pm

நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காணொலி மூலம் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 26th, 11:04 am

இன்றைய வேலைவாய்ப்பு மேளாவில் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் கடுமையான உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றியை அடைந்துள்ளீர்கள். லட்சக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்; எனவே, இந்த வெற்றி உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரை

September 26th, 10:38 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (26.09.2023) வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) உரையாற்றினார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை காணொலி மூலம் பிரதமர் வழங்கினார். தபால் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அரசுப் பணியில் சேரும் வகையில், நாடு முழுவதும் 46 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

May 23rd, 08:54 pm

ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

May 23rd, 01:30 pm

சிட்னியின் குடோஸ் பேங்க் அரினாவில் 2023, மே 23 அன்று பெருந்திரளாகக் கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, கலந்துரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மேன்மைதங்கிய திரு அந்தோணி அல்பானிஸ் உடனிருந்தார்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின விழாவில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

May 11th, 11:00 am

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது சக ஊழியர்களான திரு ராஜ்நாத் சிங் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் எனது இளம் சக ஊழியர்களே, இந்திய வரலாற்றின் பெருமைமிகு நாட்களில் இன்றைய நாளும் ஒன்று. இந்த நாளில் தான் இந்திய அறிஞர்கள் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் பெருமை பட வைத்தனர். அடல் பிகாரிப் வாஜ்பாய், இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதை இந்த நாளில் அறிவித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியாவின் அறிவியல் வல்லமையை நிரூபித்ததுடன், உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தையும் நிலை நிறுத்தியது. “நாம் நமது பயணத்தை நிறுத்தவில்லை நமது வழியில் வரும் எந்தவொரு சவால்களுக்கும் அடிபணிந்ததில்லை” என்ற அடல் பிகாரி வாஜ்பாய்-ன் வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்.

தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மே 11 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

May 11th, 10:30 am

தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.

பிரதமர் கேலோ இந்தியா சான்றிதழ்கள் டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.

April 08th, 11:30 am

டிஜிலாக்கருடன் கேலோ இந்தியா சான்றிதழ்களை ஒருங்கிணைப்பது குறித்து மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர்,