Cabinet approves construction of 6-lane greenfield corridor in Maharashtra worth Rs.19,142 Crore

December 31st, 03:06 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi has approved the construction of 6-lane greenfield access-controlled Nashik- Solapur-Akkalkot Corridor in Maharashtra worth Rs.19,142 crore. It is designed for uninterrupted traffic movement, reducing travel time, congestion, and operating costs. The project will also enhance the basic infrastructure in the region.

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் வளர்ச்சிப் பணிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 22nd, 12:00 pm

ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

May 22nd, 11:30 am

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் சூரத்தில், உணவுப் பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

March 07th, 05:34 pm

மூன்றாவது முறையாக பிரதமராக பணியாற்றும் வாய்ப்பை நாட்டு மக்களும், குஜராத் மக்களும் எனக்கு வழங்கியிருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். அதற்குப் பிறகு சூரத்துக்கு நான் வருவது இதுவே முதல் முறையாகும். நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்; என் வாழ்க்கையை வடிவமைப்பதில் நீங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள். இன்று நான் சூரத் வந்திருக்கும் வேளையில், சூரத்தின் உணர்வை என்னால் எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்? வேலை மற்றும் தொண்டு - இந்த இரண்டு விஷயங்கள் சூரத்தை உண்மையிலேயே சிறப்பானதாக்குகின்றன. ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது மற்றும் அனைவரின் முன்னேற்றத்தையும் கொண்டாடுவது சூரத்தின் ஒவ்வொரு மூலையிலும் காணக்கூடிய ஒன்று. இன்றைய நிகழ்ச்சி சூரத்தின் இந்த உணர்வு மற்றும் உணர்வை மேம்படுத்துவதில் ஒரு முன்னோக்கிய படியாகும்.

சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

March 07th, 05:30 pm

சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, சூரத்தின் லிம்பாயத்தில் இன்று தொடங்கி வைத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2.3 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமர் உதவிகளை வழங்கினார். திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சூரத் நகரின் தனித்துவமான உணர்வை வலியுறுத்தி, பணி மற்றும் அறப்பணிகளுக்கான அதன் வலுவான அடித்தளத்தை எடுத்துரைத்தார். கூட்டு ஆதரவு மற்றும் அனைவரின் வளர்ச்சியையும் கொண்டாடுவதன் மூலம் வரையறுக்கப்படுவதால், நகரத்தின் சாராம்சம் எவ்வாறு மறக்க முடியாததாகிறது என்பதை அவர் விளக்கினார்.

சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

March 07th, 03:00 pm

நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் சில்வாசாவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்

March 07th, 02:45 pm

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.

Entire world is looking towards Vadhvan Port today: PM Modi in Maharashtra

August 30th, 01:41 pm

PM Modi laid foundation stone of Vadhvan Port and other development projects in Palghar, Maharashtra, underscoring the state's pivotal role in achieving a Viksit Bharat. He highlighted the port's potential as India's largest container hub which shall boost the economy.

மகாராஷ்டிராவின் பால்கரில், சுமார் ரூ.76,000 கோடி மதிப்பிலான வத்வான் துறைமுகத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

August 30th, 01:40 pm

மகாராஷ்டிராவின், பால்கரில் இன்று(30.08.2024) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். ரூ.76,000 கோடி செலவிலான வத்வான் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ரூ.1,560 கோடி மதிப்பிலான 218 மீன்வளத் திட்டங்களும் இன்று தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது ரூ.360 கோடி செலவிலான கப்பல் தொலைத்தொடர்பு மற்றும் ஆதரவு நடைமுறையையும் திரு.மோடி தொடங்கி வைத்தார். அத்துடன், மீன்பிடி துறைமுகங்கள் அமைத்தல், மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் சந்தை அமைப்பது உள்ளிட்ட முக்கியமான மீன்வள கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மீனவப் பயனாளிகளுக்கு டிரான்ஸ்பாண்டர் சாதனங்கள் மற்றும் கிசான் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார்.

YSR Congress got 5 years in Andhra Pradesh, but they wasted these 5 years: PM Modi in Rajahmundry

May 06th, 03:45 pm

Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi addressed a massive public meeting in Rajahmundry, Andhra Pradesh, today. Beginning his speech, PM Modi said, “On May 13th, you will begin a new chapter in the development journey of Andhra Pradesh with your vote. NDA will certainly set records in the Lok Sabha elections as well as in the Andhra Pradesh Legislative Assembly. This will be a significant step towards a developed Andhra Pradesh and a developed Bharat.”

PM Modi campaigns in Andhra Pradesh’s Rajahmundry and Anakapalle

May 06th, 03:30 pm

Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi addressed two massive public meetings in Rajahmundry and Anakapalle, Andhra Pradesh, today. Beginning his speech, PM Modi said, “On May 13th, you will begin a new chapter in the development journey of Andhra Pradesh with your vote. NDA will certainly set records in the Lok Sabha elections as well as in the Andhra Pradesh Legislative Assembly. This will be a significant step towards a developed Andhra Pradesh and a developed Bharat.”

Congress' deep partnership & collaboration with Pakistan has been exposed: PM Modi in Anand

May 02nd, 11:10 am

Ahead of the impending Lok Sabha elections, Prime Minister Narendra Modi addressed a powerful rally in Anand, Gujarat. He added that his mission is a 'Viksit Bharat' and added, 24 x 7 for 2047 to enable a Viksit Bharat.

PM Modi addresses powerful rallies in Anand, Surendranagar, Junagadh and Jamnagar in Gujarat

May 02nd, 11:00 am

Ahead of the impending Lok Sabha elections, Prime Minister Narendra Modi addressed powerful rallies in Anand, Surendranagar, Junagadh and Jamnagar in Gujarat. He added that his mission is a 'Viksit Bharat' and added, 24 x 7 for 2047 to enable a Viksit Bharat.

ஹரியானா மாநிலம் குருகிராமில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 11th, 01:30 pm

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் அவர்களே, மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் சகாக்கள் நிதின் கட்கரி அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷண் பால் குர்ஜார் அவர்களே, இதர மதிப்புமிக்க விருந்தினர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!

பல்வேறு மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

March 11th, 01:10 pm

நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்தனர்.

குஜராத்தின் சூரத் வைர வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 17th, 12:00 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், நாட்டின் வைரத் தொழிலின் நன்கு அறியப்பட்ட முகங்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே, வணக்கம்!

சூரத் வைர வணிக மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

December 17th, 11:30 am

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார், பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா / தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 27th, 12:00 pm

கத்து ஷ்யாம் அவர்களின் பூமிக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரர்களின் பூமியான ஷெகாவதியில் இருந்து நாட்டிற்கான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இன்று, இங்கிருந்து பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட நிதியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

July 27th, 11:15 am

ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 10th, 12:01 pm

5000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தின் இணைப்பை இந்தத் திட்டங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் இந்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ராஜஸ்தானும் ஒன்று. இந்த மாநிலத்தின் வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும். அதனால்தான் நமது அரசு ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.