நவம்பர் 9 -ம் தேதி பிரதமர் டேராடூனுக்கு பயணம்

November 08th, 09:26 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 9-ம் தேதி மதியம் 12:30 மணியளவில் டேராடூனில் உத்தராகண்ட் மாநிலம் உதயமானதன் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையையும் வெளியிடும் பிரதமர், கூட்டத்தில் உரையாற்றுவார்.

பிரதமர், டேராடூனுக்குச் சென்று, உத்தராகண்டில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்

September 11th, 06:02 pm

2025 செப்டம்பர் 11 அன்று டேராடூனுக்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்டில் வெள்ள நிலவரம் பற்றியும், மேகவெடிப்பு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்

September 10th, 01:01 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 28th, 09:36 pm

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!

டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 28th, 09:02 pm

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பிரதமர் முன்னிலைப்படுத்தியுள்ளார்

December 08th, 05:11 pm

டேராடூனில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புகளின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர், 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கி வைக்கிறார்

December 06th, 02:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 டிசம்பர் 8 அன்று உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கிவைத்து நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் உத்தராகண்ட் பயணம்

October 10th, 08:12 pm

காலை 8.30 மணியளவில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் செல்லும் பிரதமர், அங்கு பார்வதி குண்ட் என்னுமிடத்தில் வழிபாடு செய்கிறார். இந்த இடத்தில் உள்ள புனித ஆதி கைலாயத்திடம் பிரதமர் ஆசி பெறுவார். இந்தப் பகுதி அதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றதாகும்.

டேராடூனில் இருந்து தில்லிக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 25th, 11:30 am

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங் அவர்களே, முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, உத்தராகண்ட் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினரகளே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர- சகோதரிகளே! வந்தே பாரத் ரயில் சேவை உத்தராகண்ட் மாநிலத்தில் இயக்கப்படுவதற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டேராடூனில் இருந்து தில்லிக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

May 25th, 11:00 am

டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார். உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.

டேராடூன் -தில்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மே 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

May 24th, 04:18 pm

டேராடூன் - தில்லி இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 25-ம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

இந்தியா ஜனநாயகத்தின் தாய்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

January 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.

தேர்வு குறித்து தான் இயற்றிய கவிதையை பகிர்ந்து கொண்ட மாணவி தியாவுக்கு பிரதமர் பாராட்டு

January 07th, 03:55 pm

தேர்வு குறித்து தான் இயற்றிய கவிதையை பகிர்ந்து கொண்டுள்ள டேராடூன் ஓஎன்சிஜி கேந்திரிய வித்யாலயா மாணவி தியாவுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.புஷ்கர் சிங் தாமிக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

March 23rd, 02:30 pm

உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.புஷ்கர் சிங் தாமிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே தேச நலன் குறித்த பிரச்சினைகளை புரிந்து கொண்ட டேராடூன் மாணவர் அனுராக் ரமோலாவின் செயலால் ஈர்க்கப்பட்ட பிரதமர், அந்த மாணவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

March 11th, 02:25 pm

நாட்டின் இளைய தலைமுறையினர், குறிப்பாக மாணவர்களின் மனவலிமையை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடன், அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். ‘மனதின் குரல்’, ‘தேர்வு பற்றிய விவாதம்’ அல்லது தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் என எதுவாக இருந்தாலும் பிரதமர் மோடி எப்போதும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது ஆர்வத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டேராடூனைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அனுராக் ரமோலாவின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர், அந்த மாணவரின் ஓவியம் மற்றும் அவரது சிந்தனைகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Working for development of Uttarakhand is priority for BJP-led government: PM Modi

February 07th, 02:40 pm

Prime Minister Narendra Modi today addressed a virtual Vijay Sankalp Sabha in Uttarakhand's Haridwar and Dehradun. Addressing the gathering virtually, PM Modi said, “Uttarakhand is Dev Bhumi for us, but these people consider Uttarakhand as their vault. These people want to keep on looting the natural wealth and resources that God has given the state, they want it to fill their pockets. This is their mindset.”

PM Modi addresses a virtual Vijay Sankalp Sabha in Uttarakhand's Haridwar and Dehradun

February 07th, 02:39 pm

Prime Minister Narendra Modi today addressed a virtual Vijay Sankalp Sabha in Uttarakhand's Haridwar and Dehradun. Addressing the gathering virtually, PM Modi said, “Uttarakhand is Dev Bhumi for us, but these people consider Uttarakhand as their vault. These people want to keep on looting the natural wealth and resources that God has given the state, they want it to fill their pockets. This is their mindset.”

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பலவகை திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

December 04th, 12:35 pm

உத்தராகண்டின் மதிப்புமிகு மூத்த குடிமக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை நான் தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் சிறப்பானவற்றை செய்திருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து எனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

டேராடூனில் சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

December 04th, 12:34 pm

அப்பகுதியின் நீண்டகால பிரச்சினையான நிலச்சரிவுகளை எதிர்கொண்டு பயணத்தை பாதுகாப்பாக ஆக்குவதில் கவனம் செலுத்தும் வகையிலான ஏழு திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை-58-ல் தேவ்பிரயாக்கில் இருந்து ஸ்ரீகோட் வரையில் மற்றும் பிரம்மபுரி முதல் கொடியாலா வரையில் சாலை விரிவாக்க திட்டம், யமுனை ஆற்றில் கட்டமைக்கப்பட்டுள்ள 120 மெகவாட் நீர் மின்சார திட்டம், டேராடூனில் இமாலய கலாச்சார மையம் மற்றும் அதி நவீன வாசனை பொருட்கள் மற்றும் நறுமண ஆய்வகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.