Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
November 25th, 10:20 am
Marking a momentous occasion in the nation’s socio-cultural and spiritual landscape, PM Modi ceremonially hoisted a saffron flag atop the Shikhar of the sacred Shri Ram Janmabhoomi Mandir in Ayodhya, Uttar Pradesh. He declared that for centuries to come, the Dharma Dhwaj will continue to proclaim the ideals and principles of Lord Ram. The PM remarked that if India is to become developed by 2047 and society is to be truly empowered, then Ram must be awakened within each one of us.அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் கொடி ஏற்றுதல் உத்சவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 25th, 10:13 am
நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கொடிக் கம்பத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காவி கொடியை ஏற்றி வைத்தார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதையும் இந்த விழா குறிக்கிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று அயோத்தி நகரம் இந்தியாவின் கலாச்சார உணர்வின் மற்றொரு உச்சத்தைக் காண்கிறது என்று கூறினார். இன்று முழு இந்தியாவும் முழு உலகமும் பகவான் ஸ்ரீ ராமரின் அருளால் நிரம்பியுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் தனித்துவமான திருப்தி, எல்லையற்ற நன்றியுணர்வு மற்றும் மகத்தான ஆழ்நிலை மகிழ்ச்சி இருப்பதை எடுத்துரைத்தார். பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமடைகின்றன, பல நூற்றாண்டுகளின் வலிகள் முடிவுக்கு வருகின்றன, பல நூற்றாண்டுகளின் உறுதி இன்று நிறைவேறுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார். இன்று பகவான் ஸ்ரீ ராமரின் கருவறையின் எல்லையற்ற ஆற்றலும், ஸ்ரீ ராமரின் குடும்பத்தின் தெய்வீக மகிமையும் மிகவும் தெய்வீகமான மற்றும் பிரமாண்டமான கோவிலில் இந்த தர்மத்தின் கொடி வடிவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.வாரணாசியிலிருந்து நான்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 08th, 08:39 am
உத்தரப்பிரதேசத்தின் துடிப்பான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்து வரும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தலைமை தாங்குபவரான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, எர்ணாகுளத்திலிருந்து தொழில்நுட்பம் மூலம் எங்களுடன் இணையும் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் அவர்களே, கேரளாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே,பிரதமர் திரு நரேந்திர மோடி, வாரணாசியில், நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்
November 08th, 08:15 am
இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று, பாபா விஸ்வநாதரின் புனித நகரமான வாரணாசியின் அனைத்து குடும்பங்களுக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். தேவ் தீபாவளிப் பண்டிகையின் போது காணப்பட்ட அசாதாரண கொண்டாட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், மேலும் இன்று ஒரு நல்ல தருணம் அமைத்திருக்கிறது என்றும், இந்த வளர்ச்சிக்கானத் திருவிழாவையொட்டி அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 23rd, 06:11 pm
இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
February 23rd, 04:25 pm
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூடில் உள்ள ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்றார்
October 27th, 07:57 pm
மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ரகுபீர் ஆலயத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்த பிரதமர் மோடி, பூஜா ரஞ்சோடஸ் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஸ்ரீ ராம் சமஸ்கிருத மகாவித்யாலயாவுக்குச் சென்ற அவர், குருகுலத்தின் செயல்பாடுகளை விளக்கும் காட்சியகத்தைப் பார்வையிட்டார் பின்னர் சத்குரு கண் சிகிச்சை மையத்திற்குச் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார். சத்குரு மெடிசிட்டி எனப்படும் மருத்துவ நகர மாதிரியையும் பார்வையிட்டார்.மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் உள்ள துளசி பீட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 27th, 03:55 pm
மதிப்பிற்குரிய ஜகத்குரு ஸ்ரீ ராமபத்ராச்சாரியார் அவர்கள் நம்மை ஆசீர்வதிக்க இங்கு இருக்கிறார்; மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் சிவராஜ் அவர்களே, இங்கு கூடியிருக்கும் அனைத்து மூத்த துறவிகளே, தாய்மார்களே!PM addresses programme at Tulsi Peeth in Chitrakoot, Madhya Pradesh
October 27th, 03:53 pm
PM Modi visited Tulsi Peeth in Chitrakoot and performed pooja and darshan at Kanch Mandir. Addressing the gathering, the Prime Minister expressed gratitude for performing puja and darshan of Shri Ram in multiple shrines and being blessed by saints, especially Jagadguru Rambhadracharya. He also mentioned releasing the three books namely ‘Ashtadhyayi Bhashya’, ‘Rambhadracharya Charitam’ and ‘Bhagwan Shri Krishna ki Rashtraleela’ and said that it will further strengthen the knowledge traditions of India. “I consider these books as a form of Jagadguru’s blessings”, he emphasized.மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூடில் லெப்டினன்ட் ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 27th, 02:46 pm
இன்று மீண்டும் இந்த புனித தலமான சித்ரகூடுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நம் முனிவர்கள் சொல்லி வந்த அதே அமானுஷ்ய இடம் இது தான். ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருடன் சித்ரகூடத்தில் நிரந்தரமாக வாசம் செய்கிறார். இங்கு வருவதற்கு முன்பு, ஸ்ரீ ரகுபீர் கோயில் மற்றும் ஸ்ரீ ராம் ஜானகி கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது, மேலும் ஹெலிகாப்டரில் இருந்து காமத்கிரி மலைக்கு எனது வணக்கங்களையும் செலுத்தினேன். மதிப்பிற்குரிய ரஞ்சோடதாஸ் மற்றும் அரவிந்த் பாய் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன். பகவான் ஸ்ரீராமரையும் ஜானகியையும் தரிசித்த அனுபவம், முனிவர்களின் வழிகாட்டுதல், சமஸ்கிருதக் கல்லூரி மாணவர்கள் வேத மந்திரங்களை அற்புதமாக உச்சரித்த அனுபவம் ஆகியவற்றை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
October 27th, 02:45 pm
மத்தியப் பிரதேசத்தின் சித்ரகூட்டில் இன்று (27.10.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லாலின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை 1968 ஆம் ஆண்டில் பரம் பூஜ்ய ரஞ்சோதாஸ்ஜி மகராஜ் என்பவரால் நிறுவப்பட்டது. ஸ்ரீ அரவிந்த் பாய் மஃபத்லால் பரம் பூஜ்ய ரஞ்சோடஸ்ஜி மகராஜால் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முன்னணி தொழில்முனைவோர்களில் ஒருவராக திகழ்ந்த திரு அரவிந்த் பாய் மஃபத்லால், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார்.அக்டோபர் 27-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் செல்கிறார் பிரதமர்
October 26th, 09:14 pm
பிற்பகல் 1.45 மணியளவில், சத்னா மாவட்டத்தின் சித்ரகூட் செல்லும் பிரதமர், ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை சார்பில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரகுபீர் மந்திரில் அவர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். ஸ்ரீ ராம் சமஸ்கிருத மகாவித்யாலயாவுக்கும் அவர் செல்லவுள்ளார். மறைந்த அரவிந்த் பாய் மஃபத்லாலின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்துவதோடு, ஜானகிகுண்ட் சிகித்சாலயாவின் புதிய பிரிவையும் திறந்து வைக்கிறார்.அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 14th, 12:01 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.அலிகரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
September 14th, 11:45 am
அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தின் அலிகார் முனையின் கண்காட்சி மாதிரிகள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் பார்வையிட்டார்அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 14-ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
September 13th, 11:20 am
அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 14-ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார். இதைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுவார்.விவசாயிகளுக்கு 4% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் கிடைப்பதை கிசான் கடன் அட்டைகள், உறுதி செய்யும்…. கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வீர்!
February 29th, 06:41 pm
பிரதமரின் கிசான் திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைவதையொட்டி, பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் கிசான் கடன் அட்டைகள் முழுமையாக வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தப் பணியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அப்பகுதி மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்க உள்ளது…. கூடுதல் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்!
February 29th, 06:41 pm
புந்தேல்கண்ட் விரைவுச் சாலை உத்தரப்பிரதேச மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர் மக்களை தில்லி உள்ளிட்ட பிற நகரங்களோடு இணைக்கவும் உதவிகரமாக இருக்கும். 296 கிலோமீட்டர் தூரமுள்ள புந்தேல்கண்ட் விரைவுச்சாலைக்கு உத்தரப்பிரதேசத்தின் சித்திரக்கூட்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்…. இவை விவசாயிகளுக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
February 29th, 06:41 pm
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்ய உதவுவதன் மூலம், அவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில், நாடு முழுவதும் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.Bundelkhand Expressway will enhance connectivity in UP: PM Modi
February 29th, 02:01 pm
Prime Minister Narendra Modi laid the foundation stone for the 296-kilometres long Bundelkhand Expressway at Chitrakoot today. To be built at a cost of Rs 14,849 crore, the Expressway is expected to benefit Chitrakoot, Banda, Mahoba, Hamirpur, Jalaun, Auraiya and Etawah districts.புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பெருமிதம்
February 29th, 02:00 pm
நாட்டில் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு. மோடி, புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை அல்லது திட்டமிடப்பட்டுள்ள கங்கா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதுடன் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பெரிய நகரங்களில் உள்ள வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறினார்.