The whole country will take inspiration from you: PM Modi during interaction with Indian Blind Women’s Cricket Team

November 28th, 10:15 am

PM Modi interacted warmly with the Indian Blind Women’s T20 World Cup Champions at his residence in 7, LKM, New Delhi. During the interaction, the PM acknowledged the team’s determination and resilience, appreciated the musical talent of one of the players and also highlighted the significance of 150 years of Vande Mataram. He remarked that their success is an inspiration not only for the differently-abled but for all citizens of India.

பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

November 28th, 10:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (27.11.2025) புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக்கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அன்புடன் அவர்களுடன் உரையாடிய திரு மோடி, அவர்களின் மனஉறுதியை அங்கீகரித்து, தன்னம்பிக்கை மற்றும் ஸ்த்ரத்தன்மையுடன் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகம் அளித்தார். கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்கள் விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வீராங்கனைகள் தங்களுக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கியுள்ளதுடன், இது அவர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Tribal pride has been an integral part of India's consciousness for thousands of years: PM Modi in Dediapada, Gujarat

November 15th, 03:15 pm

In his address at the Janjatiya Gaurav Diwas programme marking the 150th Birth Anniversary of Bhagwan Birsa Munda in Dediapada, PM Modi paid homage to him. Launching development projects worth over ₹9,700 crore, the PM said tribal pride has been an integral part of India’s consciousness for thousands of years. Highlighting that Vajpayee Ji’s government created a separate Tribal Affairs Ministry, he added that his government has significantly increased the ministry’s budget.

குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

November 15th, 03:00 pm

குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

PM Modi’s candid interaction with children successfully treated for congenital heart ailments in Chhattisgarh

November 01st, 05:30 pm

As part of the ‘Dil Ki Baat’ programme, PM Modi interacted with 2,500 children who were successfully treated for congenital heart diseases at Sri Sathya Sai Sanjeevani Hospital in Nava Raipur, Chhattisgarh. As the children shared their experiences, the PM expressed his joy in meeting them and advised them to practice yoga for a healthy body. He also informed them about the centenary year of Shri Sathya Sai Baba.

பிறவி இதய கோளாறிலிருந்து மீண்டு வந்துள்ள குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

November 01st, 05:15 pm

இதயத்துடன் பேசுங்கள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, பிறவியிலேயே இதயக் கோளாறு பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள 2500 குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவினி மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 1-ம் தேதி பிரதமர் பயணம் சத்தீஷ்கர் மாநிலம் உருவான 25-வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

October 31st, 12:02 pm

நவா ராய்ப்பூர் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு மனதோடு பேசுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் வாழ்க்கையின் பரிசு நிகழ்ச்சியில் பிறவி இதயநோய் சிகிச்சை பெற்றுக் கொண்ட 2,500 குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

பிரதமர் செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்

September 16th, 02:49 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணி அளவில் தார் என்ற இடத்தில் ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் மற்றும் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் இயக்கங்களை அவர் தொடங்கி வைக்கிறார். அத்துடன் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

பிரதமர், டேராடூனுக்குச் சென்று, உத்தராகண்டில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்

September 11th, 06:02 pm

2025 செப்டம்பர் 11 அன்று டேராடூனுக்குச் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தராகண்டில் வெள்ள நிலவரம் பற்றியும், மேகவெடிப்பு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்திலிருந்து பிரதமர் ஆய்வு செய்தார்

September 09th, 05:34 pm

2025 செம்டம்பர் 9 அன்று பஞ்சாபில் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அங்கு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும் வெள்ள நிலைமையையும், சேதங்களையும் ஆய்வு செய்தார்.

‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவின் அதிபரைச் சந்தித்தார்

July 09th, 07:55 pm

நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் மாண்புமிகு டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த பிரதமரை, அதிபர் நந்தி-நதைத்வா அன்புடன் வரவேற்று, சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். பிரதமர் அளவில் இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கான இந்தப் பயணம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளபட்ட பயணம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் நந்தி-நதைத்வா நடத்திய முதல் இருதரப்பு அரசு முறை சந்திப்பும் இதுவாகும்.

அமெரிக்க துணை அதிபர் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் விருந்தளித்தார்

April 21st, 08:56 pm

அமெரிக்க துணை அதிபர் மாண்புமிகு திரு ஜே.டி.வான்ஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவருடன், அவரது துணைவி திருமதி உஷா வான்ஸ், அவர்களது குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

பவாலியாலி தாம் நிகழ்ச்சியின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்

March 20th, 04:35 pm

மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களே, சமூகத்தின் மதிப்பிற்குரியவர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தியுள்ள சகோதர சகோதரிகளே – வணக்கம். ஜெய் தக்கர்!

பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

March 20th, 04:30 pm

குஜராத் பர்வாட் சமாஜ் தொடர்பான பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். பர்வாட் சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும் இந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த வணக்கத்திற்குரிய துறவிகள் மற்றும் மஹந்த்களுக்கு மரியாதை செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய அளவற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை எடுத்துரைத்த திரு மோடி, இந்தப் புனிதமான நிகழ்வின் போது மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க தருணத்தை குறிப்பிட்டு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும், அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். மஹந்த் ஸ்ரீ ராம் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார்.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டை முன்னிட்டு பிரதமர் மகிழ்ச்சி

January 22nd, 10:04 am

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (22.01.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். வரலாற்று ரீதியில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்த இயக்கத்தை அடிமட்ட அளவில் துடிப்பானதாக மாற்றிய அனைத்து தரப்பினரையும் பாராட்டியுள்ளார்.

வாரணாசியில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

October 20th, 02:21 pm

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரும், வணக்கத்திற்குரிய ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி; உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்; முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்; துணை முதலமைச்சர், பிரஜேஷ் பதக்; சங்கரா கண் அறக்கட்டளையின் ஆர்.வி.ரமணி; டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம்; திரு முரளி கிருஷ்ணமூர்த்தி; ரேகா ஜுன்ஜுன்வாலா; மற்ற மதிப்புமிக்க உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

October 20th, 02:15 pm

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திரு மோடி பார்வையிட்டார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டை குறிக்கும் வகையில் இளைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தூய்மை இயக்கத்தில் பங்கேற்றார்

October 02nd, 04:40 pm

தில்லியில் இன்று பள்ளிச் சிறார்களுடன் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டு குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில், தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்

September 05th, 04:11 pm

நாட்டில் பச்சிளங் குழந்தை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முயற்சிகளின் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான அறிக்கையை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்