திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 18th, 09:00 pm

முன்னாள் பிரதமர் திரு தேவ கௌடாவின் மனைவி திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். திருமதி சென்னம்மா அவர்கள், பணிவு மற்றும் சமூக சேவைக்கான பேரார்வத்திற்காகப் போற்றப்பட்டார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.