மத்திய அரசுத்துறைச் செயலாளர்களுடனான உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்

May 08th, 02:17 pm

தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து தேசிய தயார்நிலை குறித்தும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்வதற்காகவும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்களுடனான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (08.05.2025) நடைபெற்றது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காக தில்லி அரசுக்கு பிரதமர் பாராட்டு

April 11th, 08:56 am

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காகவும், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கத் தொடங்கி உள்ளதற்காகவும் தில்லி அரசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு அடுத்தபடியாக, இந்தியா வெள்ளி கிரகத்தில் அறிவியல் இலக்குகளை நோக்குகிறது

September 18th, 04:37 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,வெள்ளி கிரக சுற்றுவட்டப் பாதையை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சந்திரன், செவ்வாய் கிரகங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும். பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் மற்றும் பூமியைப் போன்ற நிலைமைகளில் உருவாகியதாக நம்பப்படும் வீனஸ், கிரக சூழல்கள் எவ்வாறு மிகவும் வித்தியாசமாக உருவாகலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

ஊக்கமளிக்கும் நபர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்

September 09th, 06:00 pm

பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பரிசீலனையில் தீவிரமாக பங்கேற்குமாறு நாட்டு மக்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சவாலான நேரத்தில் கேரள மக்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி

August 10th, 10:58 pm

எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்ததிலிருந்து, நான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது. இன்று, நான் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். நான் ஒரு வான்வழி ஆய்வையும் மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் ஆற்றிய உரை

August 10th, 07:40 pm

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, ஆளுநர் அவர்களே, மத்திய அரசில் எனது மதிப்பிற்குரிய சகாவும், இந்த மண்ணின் மைந்தருமான சுரேஷ் கோபி அவர்களே!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது பிரார்த்தனைகள் உள்ளன, நிவாரணப் பணிகளுக்கு உதவ மத்திய அரசு உறுதியளிக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்

August 10th, 07:36 pm

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.