Cabinet approves Minimum Support Price for Copra for 2026 season

December 12th, 04:20 pm

The Cabinet Committee on Economic Affairs chaired by PM Modi, has given its approval for the Minimum Support Price (MSP) for copra for 2026 season. The MSP for Fair Average Quality of milling copra has been fixed at Rs.12,027/- per quintal and for ball copra at Rs.12,500/- per quintal. This will ensure better remunerative returns to the coconut growers while incentivizing farmers to expand copra production.

Cabinet approves policy for auction of Coal Linkage for Seamless, Efficient & Transparent Utilisation (CoalSETU)

December 12th, 04:18 pm

Adding to the series of coal sector reforms being undertaken by the Government, the Cabinet Committee, chaired by PM Modi, has today approved the Policy for Auction of Coal Linkage for Seamless, Efficient & Transparent Utilisation (CoalSETU) by creating a “CoalSETU window” in the NRS Linkage Policy. The Policy will allow allocation of coal linkages on auction basis on long-term for any industrial use and export.

Cabinet approves scheme of Conduct of Census of India 2027

December 12th, 04:13 pm

The Union Cabinet, chaired by PM Modi, has today approved the proposal for conducting the Census of India 2027 at a cost of ₹11,718.24 crore. About 30 lakh field functionaries will complete this gigantic exercise of national importance by visiting each and every household. Census-as-a-Service (CaaS) will deliver data to ministries in a clean, machine-readable, and actionable format.

பசுமை எரிசக்திக்கு முக்கியமான கிராஃபைட், சீசியம், ரூபிடியம் மற்றும் சிர்கோனியம் கனிமங்களின் ராயல்டி விகிதங்களை சீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

November 12th, 08:26 pm

சீசியம்: உற்பத்தி செய்யப்படும் தாதுவில் உள்ள சீசியம் உலோகத்தின் மீது விதிக்கப்படும் சீசியம் உலோகத்தின் சராசரி விற்பனை விலையில் ராயல்டி விகிதம் 2% விதிக்கப்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

November 12th, 08:23 pm

உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும்.

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான தீர்மானம் மத்திய அமைச்சரவையில் நிறைவேறியது

November 12th, 08:17 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 10, 2025 அன்று மாலை தில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்காக அமைச்சரவை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

இந்தியாவின் ஏற்றுமதி சூழலியலை வலுப்படுத்த ரூ.25,060 கோடி செலவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

November 12th, 08:15 pm

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், முதல் முறை ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் தொழிலாளர் சார்ந்த துறைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கு 2025–26 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியான ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கத்திற்கு (இ.பி.எம்) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர் மாநிலங்களில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 07th, 03:11 pm

ரயில்வே அமைச்சகத்தின் 24,634 கோடி ரூபாய் செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

October 01st, 03:43 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அதிகரித்துள்ள மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளை எளிதாக்கும் வகையில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் ஒன்பது ஆண்டு காலத்தில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான மொத்த நிதி தேவை 5862.55 கோடி (தோராயமாக) ரூபாயாகும். இதில் மூலதனச் செலவாக 2585.52 கோடி (தோராயமாக) ரூபாயும், செயல்பாட்டுச் செலவாக 3277.03 கோடி (தோராயமாக) ரூபாயும் அடங்கும். தேசியக் கல்விக் கொள்கை, 2020-க்கான முன்மாதிரிப் பள்ளிகளாக, முதன்முறையாக, இந்த 57 கேந்திரிய பள்ளிகளில் பால்வாடிகள், அதாவது 3 ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு முந்தைய நிலையிலான வகுப்புகள், தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2026-27 சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 01st, 03:31 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2026-27 - ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவத்தில் பயிரிடப்படும் கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

October 01st, 03:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் மற்றும் எஸ்பிவி இந்தியா கூட்டமைப்பு 2025-26 முதல் 2030-31 வரை, கூடுதலாக அடுத்த ஆண்டுகள் வரையிலும், (2031-32 முதல் 2037-38 வரை) அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதற்காக, மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

அசாமில் கலிபோர்-நுமலிகர் பிரிவில் 4 வழிச்சாலையாக உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

October 01st, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள பாதையில் முன்மொழியப்பட்ட வனவிலங்குகளுக்கு உகந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவது உட்பட, எண்எச் - 715 - ன் கலிபோர்-நுமலிகர் பிரிவின் 4 வழிச்சாலையாக தற்போதுள்ள சாலையை அகலப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் முறையில் மொத்தம் 85.675 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த மூலதனச் செலவு 6,957 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.என்எச் - 715 (பழைய என்எச் - 37) - ன் தற்போதைய கலிபோர்-நுமலிகர் பிரிவு, ஜக்லபந்தா (நாகான்) மற்றும் போககாட் (கோலாகாட்) நகரங்களின் நெரிசல் மிகுந்த கட்டடப் பகுதிகள் வழியாகச் செல்லும், நடைபாதைகள் இல்லாத 2-வழிச் சாலைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள நெடுஞ்சாலையின் ஒரு முக்கிய பகுதி காசிரங்கா தேசிய பூங்கா வழியாகவோ அல்லது பூங்காவின் தெற்கு எல்லை வழியாகவோ செல்கிறது, இது 16 முதல் 32 மீட்டர் வரை வரையறுக்கப்பட்ட பாதை உரிமையைக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில், பூங்காவிற்குள் உள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி, பூங்காவிலிருந்து வனவிலங்குகள் தற்போதுள்ள நெடுஞ்சாலையைக் கடந்து உயரமான கர்பி-அங்லாங் மலைகளை நோக்கி நகரும். நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் அதிக போக்குவரத்து இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பாட்டு வன விலங்குகள் உயிரிழக்கின்றன.இந்தச் சவால்களைச் சமாளிக்க, இந்தத் திட்டத்தில் காசிரங்கா தேசியப் பூங்காவிலிருந்து கர்பி-ஆங்லாங் மலைகள் வரையிலான வனவிலங்குகளுக்கு முழுமையான குறுக்கு வழித்தடத்தையும் உள்ளடக்கிய சுமார் 34.5 கி.மீ உயரமான பாதை அமைக்கப்படும். இது வனவிலங்குகள் தடையின்றி செல்வதற்காகவும், ஜக்லபந்தா மற்றும் போககாட்டைச் சுற்றி 21 கி.மீ நீளமுள்ள பசுமைப் பாதைகள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள பாதையில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும்.மேலும் குவஹாத்தி (மாநிலத் தலைநகர்), காசிரங்கா தேசியப் பூங்கா (சுற்றுலாத் தலம்) மற்றும் நுமலிகர் ( தொழில்துறை நகரம்) ஆகியவற்றுக்கு இடையே நேரடி போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்த உதவிடும்.இந்தத் திட்ட சீரமைப்பு 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை (என்எச் -127, என்எச் -129) மற்றும் 1 மாநில நெடுஞ்சாலையுடன் (எஸ்எச் -35) ஒருங்கிணைத்து, அசாம் மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கிய பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்து முனைகளுக்கு தடையற்ற போக்குவரத்து வசதியை வழங்குகிறது. கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட வழித்தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்களை (நாகான், ஜக்லபந்தா, விஸ்வநாத் சார்லி) 3 விமான நிலையங்களுடன் (தேஸ்பூர், லியாபரி, ஜோர்ஹாட்) இணைப்பதன் மூலம் பல்லடுக்கு - மாதிரி ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். இதன் மூலம் இப்பகுதி முழுவதும் பொருட்கள் மற்றும் பயணிகளின் விரைவான போக்குவரத்துக்கான இயக்கத்தை எளிதாக்கும். இந்த திட்ட சீரமைப்பு 02 சமூக-பொருளாதார முனைகள், 08 சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்துகிறது. இது பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் மதம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்துகிறது.இத்திட்டம் நிறைவடைந்தவுடன், கலிபோர்-நுமலிகர் பிரிவு பிராந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். முக்கிய சுற்றுலா, தொழில்துறை மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்தும். காசிரங்கா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன்,வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புக்களை உருவாக்கும். இந்த திட்டம் 15.42 லட்சம் மனித நாட்கள் வரையிலான நேரடி வேலைவாய்ப்பையும் 19.19 லட்சம் மனித நாட்கள் வரையிலான மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்

பருப்பு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஆறு ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி 350 லட்சம் டன்னை எட்டும்

October 01st, 03:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தன்னிறைவு நிலையை அடைவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2025-26 முதல் 2030-31 வரை ஆறு ஆண்டு காலத்திற்கு, 11,440 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

October 01st, 03:06 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணைத் தொகையை 01.07.2025 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 55% விகிதத்தை விட 3% அதிகமாகும்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 24th, 03:10 pm

ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 10,91,146 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி வழங்கப்பட உள்ளது.

கப்பல் கட்டுமானம், கடல்சார் நிதியுதவி, உள்நாட்டு திறன் ஆகியவற்றை வலுப்படுத்தும் நான்கு முக்கிய அணுகுமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

September 24th, 03:08 pm

இந்தியாவின் கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் சூழல் அமைப்பை வலுப்படுத்த ரூ.69,725 கோடி மதிப்பிலான விரிவடைந்த திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு திறனை வலுப்படுத்துதல், நீண்ட கால நிதியுதவியை மேம்படுத்துதல், புதிய பகுதியில் மற்றும் ஏற்கனவே செயல்படும் பகுதியில் கப்பல் கட்டும் தள மேம்பாடு, தொழில்நுட்ப திறன்களை விரிவாக்குதல் ஆகியவற்றை வலுப்படுத்த இந்த நான்கு முக்கிய அணுகுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Cabinet approves 4-lane road project in Bihar worth Rs.3,822.31 crore

September 24th, 03:07 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the 4-lane Sahebganj-Areraj-Bettiah road project in Bihar at Rs. 3,822.31 crore. The project will improve access to key heritage and Buddhist sites, strengthening the Buddhist circuit and tourism in Bihar. It will also improve employment opportunities, boosting regional growth.

Cabinet approves a railway project connecting Bihar, Jharkhand and West Bengal worth Rs. 3,169 Crore

September 10th, 03:05 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved doubling the 177 km Bhagalpur–Dumka–Rampurhat railway line across Bihar, Jharkhand, and West Bengal at a cost of ₹3,169 crore. This multi-tracking will ease congestion, improve connectivity for people and goods, boost tourism, and support PM Modi’s vision of an Atmanirbhar Bharat by creating more employment and self-employment opportunities in the region.

பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 10th, 03:02 pm

பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்தது. 82.400 கி.மீ. நீளத்திற்கு ரூ.4,447.38 கோடி முதலீட்டுச் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

நேபாளத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

September 09th, 10:29 pm

இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தமது அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக இன்று நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வன்முறையில் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அமைதி மற்றும் ஒற்றுமையின் மாண்புகளை நிலைநாட்டுமாறு நேபாள குடிமக்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.