ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்தார்

November 23rd, 02:18 pm

ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசாவுக்கு நன்றி தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல தென்னாப்பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு

August 31st, 11:00 am

சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை

July 09th, 05:55 am

பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

July 07th, 11:38 pm

சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.07.2025) உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

July 07th, 11:13 pm

பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர், உருகுவே அதிபரை சந்தித்தார்.

July 07th, 09:20 pm

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உருகுவே குடியரசின் அதிபர் மாண்புமிகு திரு யமண்டு ஓர்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பொலிவியா அதிபரை பிரதமர் சந்தித்தார்

July 07th, 09:19 pm

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, பொலிவிய அதிபர் மேதகு லூயிஸ் ஆர்ஸ் கேடகோராவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

July 07th, 06:00 am

அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் கியூபா அதிபரை சந்தித்தார்

July 07th, 05:19 am

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர், அதிபர் டயஸ்-கேனலை சந்தித்திருந்தார். அப்போது, கியூபா சிறப்பு அழைப்பு நாடாக இருந்தது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமருடன் சந்திப்பு

July 07th, 05:13 am

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.

அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை

July 06th, 11:07 pm

உலகளாவிய அமைதியும் பாதுகாப்பும் வெறும் இலட்சியங்கள் மட்டுமல்ல, மாறாக அவை நமது பகிரப்பட்ட நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளமாகும். அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மனித சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பிரிக்ஸ் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது முயற்சிகளை ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் ஒன்றாக முன்னேற வேண்டும்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை

July 06th, 09:41 pm

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை

July 06th, 09:40 pm

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

July 06th, 09:39 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிற்கு வருகை தருகிறார்

July 06th, 04:47 am

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலுக்கு வந்தார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பல உலகத் தலைவர்களைச் சந்திப்பார்.

கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

July 02nd, 07:34 am

அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எனது கருத்துப் பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன். சக ஜனநாயக நாடாக, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கௌரவமிக்கதாக அமையும்.

Prime Minister Narendra Modi to visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil, and Namibia

June 27th, 10:03 pm

PM Modi will visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil and Namibia from July 02-09, 2025. In Ghana, Trinidad & Tobago and Argentina, the PM will hold talks with their Presidents to review the strong bilateral partnership. In Brazil, the PM will attend the 17th BRICS Summit 2025 and also hold several bilateral meetings. In Namibia, PM Modi will hold talks with the President of Namibia and deliver an address at the Parliament of Namibia.

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

January 25th, 05:48 pm

இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும், இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

January 25th, 01:00 pm

இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

December 16th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.