Dialogue and diplomacy are the only solutions: PM Modi in Lok Sabha on West Asia conflict

March 23rd, 02:15 pm

Amid the West Asia conflict, PM Modi addressed the Lok Sabha and remarked that the whole world is urging all parties to work towards the earliest possible resolution of this crisis. Listing the various initiatives taken by the government to assist affected citizens, he reaffirmed India’s unwavering commitment to humanity and peace. He called upon the nation to remain united and cautioned against those who may seek to exploit the situation.

PM Modi addresses the Lok Sabha on the ongoing conflict in West Asia

March 23rd, 02:00 pm

Amid the West Asia conflict, PM Modi addressed the Lok Sabha and remarked that the whole world is urging all parties to work towards the earliest possible resolution of this crisis. Listing the various initiatives taken by the government to assist affected citizens, he reaffirmed India’s unwavering commitment to humanity and peace. He called upon the nation to remain united and cautioned against those who may seek to exploit the situation.

In this decade of the 21st century, India is riding the Reform Express: PM Modi at ET Now Global Business Summit

February 13th, 08:30 pm

PM Modi addressed the ET Now Global Business Summit 2026 in New Delhi, highlighting the theme ‘A Decade of Disruption, A Century of Change.’ He noted that despite global shocks—from the pandemic to wars and supply chain breakdowns, India’s decade has been defined by strong growth, effective delivery, and a vibrant democracy. Recalling that India was the 11th-largest economy a decade ago, he said the nation is now rapidly moving toward becoming the world’s third-largest economy.

எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 13th, 08:00 pm

புதுதில்லியில் இன்று நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், 'பத்தாண்டு கால இடையூறு, ஒரு நூற்றாண்டுக்கான மாற்றம்' என்ற கருப்பொருளில் உரையாற்றினார். 21 - ம் நூற்றாண்டின் கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெருந்தொற்று, பதற்றமான சூழல், பல்வேறு பிராந்தியங்களில் போர்கள், மற்றும் உலகளவிலான சமநிலையைப் பாதிக்கும் வகையில், விநியோக நடைமுறைகளில் முறிவுகள் உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நெருக்கடியான சூழல்கள் நாட்டின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றும், இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இந்தியா கடந்த பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, சிறந்த விநியோக செயல்பாடுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றால் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதில் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா உலகளவில் பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்தது. கடும் சவால்களுக்கு இடையே நாட்டின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா விரைவான வளர்ச்சியுடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்த நூற்றாண்டிற்கான மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக இந்தியா திகழும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியா தற்போது உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு பதினாறு சதவீதத்திற்கும் கூடுதலாக பங்களித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா உலகளவில் வளர்ச்சிக்கான உத்வேகத்துடன், உலகப் பொருளாதாரத்தின் புதிய ஊக்கியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

NCC is a movement that empowers India's Yuva Shakti: PM Modi at the annual NCC Rally in Delhi

January 28th, 04:00 pm

PM Modi addressed the annual NCC Rally at the Cariappa Parade Ground in Delhi. In his address, the PM paid tribute to Maharashtra Dy CM late Shri Ajit Pawar. He noted that the FTAs India has signed with several countries, including the recent India–EU FTA, will create countless opportunities for the youth. The PM also called for a new tradition in the country by holding a grand event every 25 January on National Voters’ Day to honour first-time voters.

புதிய இந்தியாவின் வருங்காலத் தூண்கள்: என்.சி.சி பேரணியில் பிரதமரின் எழுச்சி உரை

January 28th, 03:30 pm

தில்லியில் நடைபெற்ற வருடாந்திர என். சி. சி. பிரதமர் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கினைப் பாராட்டினார். புதிய இந்தியாவின் வருங்கால தூண்களாக அவர்கள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மங்கோலிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

October 14th, 01:15 pm

ஆறு ஆண்டுகளுக்குப் பின் மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகச் சிறப்பான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-மங்கோலியா தூதரக உறவுகளின் எழுபது ஆண்டுகளையும், பாதுகாப்பு கூட்டாண்மையின் பத்து ஆண்டுகளையும் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் எங்களின் பகிரப்பட்ட பாரம்பரிய, பன்முகத்தன்மை கொண்ட, வலுவான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் கூட்டாக அஞ்சல் தலையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை

May 13th, 03:45 pm

இந்த முழக்கத்தின் சக்தியை உலகம் தற்போதுதான் கண்டிருக்கிறது. பாரத் மாதா கி ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, பாரத தாயின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதமாகும். நாட்டிற்காக வாழ விரும்பும், ஏதாவது சாதிக்க விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. நமது ட்ரோன்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, ​​நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் இலக்கை அடையும்போது, ​​எதிரி கேட்கிறான் - பாரத் மாதா கி ஜெய்! நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, ​​வானத்திலிருந்து உலகம் வரைக்கும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே எதிரொலிக்கிறது - பாரத் மாதா கி ஜெய்!

பிரதமர் திரு நரேந்திர மோடி துணிச்சல்மிக்க விமானப்படைப் போர் வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுடன் ஆதம்பூரில் விமானப் படை நிலையத்தில் உரையாடினார்.

May 13th, 03:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அவர்களிடம் உரையாற்றிய அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தின் சக்தியை எடுத்துரைத்தார், உலகம் அதன் வலிமையைக் கண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பாரதத் தாயின் கண்ணியத்தை நிலைநிறுத்த தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் ஒரு புனிதமான உறுதிமொழி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முழக்கம் நாட்டிற்காக வாழவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும் என்று மேலும் கூறினார். போர்க்களத்திலும் முக்கியமான பணிகளிலும் 'பாரத் மாதா கி ஜெய்' எதிரொலிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வீரர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடும்போது, அது எதிரியின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ராணுவ வலிமையை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டைகளை தாக்கும் போது, ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கும் போது, எதிரி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற ஒரே ஒரு சொற்றொடரை மட்டுமே கேட்கிறார் என்று கூறினார். இருண்ட இரவுகளிலும் கூட, எதிரிகள் நம் நாட்டின் வெல்ல முடியாத உணர்வைக் காணும்படி கட்டாயப்படுத்தும் வகையில், வானத்தை ஒளிரச் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை

January 27th, 05:00 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு ராஜ்நாத் சிங் ஜி, சஞ்சய் சேத் ஜி, ஜெனரல் அனில் சவுகான் ஜி, முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், என்சிசியில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 கேடட்களும் இங்கே நம்மிடையே உள்ளனர். இந்த கேடட்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

January 27th, 04:30 pm

தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். நமது இளைய இந்தியா இணையதளம் மூலம் மெய்நிகர் முறையில் நாடு முழுவதிலும் இருந்து இணைந்துள்ள இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

December 01st, 08:52 am

எல்லைப் பாதுகாப்புப் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படை வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை, பாதுகாப்புத் துறையில் முக்கிய அங்கம் வகிப்பதாகக் கூறி அவர் பாராட்டினார்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் படையினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 31st, 07:05 pm

நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்!

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.

October 31st, 07:00 pm

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார். இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் பண்டிகையைக் கொண்டாடும் தமது பாரம்பரியத்தைப் பிரதமர் தொடர்ந்தார். கழிமுகப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையங்களில் ஒன்றையும் பார்வையிட்ட பிரதமர், வீரம் செறிந்த பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினார்.

காலாட்படை தினத்தை முன்னிட்டு, படையின் அனைத்துப் பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

October 27th, 09:07 am

காலாட்படை தினத்தை முன்னிட்டு காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது சேவைகளைப் பாராட்டியுள்ளார்.

காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிப்ரவரி 3-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

February 02nd, 11:10 am

காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ 2024 பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 10 மணியளவில் விஞ்ஞான் பவனில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 15th, 12:15 pm

வாழ்த்துகள்! உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு போன்ற கொண்டாட்டங்களால் தற்போது நாடு முழுவதும் ஒரு பண்டிகை சூழல் பரவியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் உரையாடுவதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். தற்போது, அயோத்தியில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், என் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மிகவும் பின்தங்கிய ஒரு லட்சம் பழங்குடி சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இன்று வீடு கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர்-ஜன்மனின் கீழ் 1 லட்சம் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல் தவணையை பிரதமர் வெளியிட்டார்

January 15th, 12:00 pm

பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பி.எம்-ஜன்மன்) திட்டத்தின் கீழ், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அகில இந்திய காவல்துறைத் தலைமை இயக்குநர்கள்/ காவல்துறைத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

January 07th, 08:34 pm

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் 2024 ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 58-வது அகில இந்திய காவல்துறைத் தலைமை இயக்குநர்கள்/ காவல்துறைத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

There is continuous progress in bilateral trade, investment between India and Kenya: PM Modi

December 05th, 01:33 pm

Addressing the event during the visit of the President of Kenya to India, PM Modi said, Africa has always been given high priority in India's foreign policy. Over the past decade, we have strengthened our collaboration with Africa in mission mode. I am confident that President Ruto's visit will not only enhance our bilateral relations but also provide new impetus to our engagement with the entire African continent.