ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
April 14th, 12:00 pm
ஹரியானாவின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர் லால் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே. வாழ்த்துக்கள்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
April 14th, 11:54 am
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஹரியானாவின் புனித பூமிக்கு மரியாதை செலுத்தினார், இது அன்னை சரஸ்வதியின் தோற்றம், மந்திரதேவியின் இருப்பிடம், பஞ்சமுகி ஹனுமான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கபால்மோச்சன் சாஹிப் ஆகியோரின் இருப்பிடம் என்று அவர் கூறினார். ஹரியானா கலாச்சாரம், பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சங்கமம் என்று அவர் விவரித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், பாபா சாகேப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை எடுத்துரைத்து, அவை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14 அன்று பிரதமர் ஹரியானா செல்கிறார்
April 12th, 04:48 pm
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 14 அன்று ஹரியானா செல்கிறார் அவர் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பார். ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
October 21st, 10:25 am
கடந்த 4-5 ஆண்டுகளை நாம் பார்த்தால், ஒரு பொதுவான கருப்பொருள் பெரும்பாலான விவாதங்களில் மையமாக உள்ளது. கவலை - எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கொரோனா காலத்தில், உலகளாவிய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்ற கவலை இருந்தது. கோவிட் பரவியதால், உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்தன. தொற்றுநோயானது பணவீக்கம், வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய கவலைகளை அதிகரித்தது. பின்னர், ஏற்பட்ட போர்கள் விவாதங்களையும் கவலைகளையும் தீவிரப்படுத்தின. உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் அப்பாவி உயிர்களின் இழப்பு குறித்து கவலை இருந்தது. இந்தப் பதட்டங்கள், மோதல்கள் மற்றும் அழுத்தங்கள் உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகளாக மாறின. உலகளாவிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 21st, 10:16 am
புதுதில்லியில் இன்று என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்றதுடன், உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள் தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'கூட்டுறவுத் துறையின் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 24th, 10:36 am
உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு பியூஷ் கோயல் அவர்களே, தேசிய கூட்டுறவு சங்கக் குழுக்களின் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
February 24th, 10:35 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரை
February 23rd, 02:45 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மகேந்திர நாத் பாண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரஜேஷ் பதக் அவர்களே, பனாஸ் பால் பண்ணையின் தலைவர் திரு சங்கர்பாய் சவுத்ரி அவர்களே, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு பூபேந்திர சவுத்ரி அவர்களே, மாநிலத்தின் பிற அமைச்சர்கள், பிரதிநிதிகள், காசியைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளே.வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 23rd, 02:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசியில் இன்று ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசி, கார்கியாவ்னில் உள்ள உப்சிடா வேளாண் பூங்காவில் கட்டப்பட்டுள்ள பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் நிறுவனத்தின் பால் பதப்படுத்தும் பிரிவான பனாஸ் காசி சங்குலையும் பார்வையிட்ட பிரதமர், பசு வளர்ப்பு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் மற்றும் புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட பயனர் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, கல்வி, சுகாதாரம், குடிநீர், நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு போன்ற முக்கியமான துறைகளைப் பூர்த்தி செய்கின்றன.கோவாவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரம் 2024 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 06th, 12:00 pm
கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, கோவாவின் துடிப்பான முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு ஹர்தீப் சிங் பூரி, திரு ராமேஸ்வர் தெளி அவர்களே, பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
February 06th, 11:18 am
இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவாவில் தொடங்கி வைத்தார். இந்தியா எரிசக்தி வாரம் 2024 இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரே எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும், இது இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகளை ஊக்குவிப்பதற்காக முழு எரிசக்தி மதிப்பு சங்கிலியையும் ஒன்றிணைக்கிறது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் வட்டமேஜை மாநாட்டில் ஆலோசனை மேற்கொண்டார்.பசுமை வளர்ச்சி குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக்கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 23rd, 10:22 am
இன்று உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பன்முகத் தன்மைக் கொண்டதாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பசுமை முதலீட்டாளர்களும் இத்துறையில், முதலீடு செய்ய இந்த பட்ஜெட்டின் மூலம் இந்தியா சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. இத்துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இது பலன் அளிக்கும்.பசுமை வளர்ச்சிக் குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 23rd, 10:00 am
பசுமை வளர்ச்சிக் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கு கருத்துக்களைக் கோரும் வகையில், பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையக் கருத்தரங்குகளின் முதலாவது பகுதி இதுவாகும்.சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சிமாநாட்டு துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 12th, 11:01 am
உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது நாடாளுமன்ற நண்பர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சர்வதேச பால்வள கூட்டமைப்பின் தலைவர் திரு பிரசல் அவர்களே, தலைமை இயக்குநர் திருமிகு கரோலின் எமாண்ட் அவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM inaugurates International Dairy Federation World Dairy Summit 2022 in Greater Noida
September 12th, 11:00 am
PM Modi inaugurated International Dairy Federation World Dairy Summit. “The potential of the dairy sector not only gives impetus to the rural economy, but is also a major source of livelihood for crores of people across the world”, he said.குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 28th, 08:06 pm
மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்
August 28th, 05:08 pm
காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.Freebies will prevent the country from becoming self-reliant, increase burden on honest taxpayers: PM
August 10th, 04:42 pm
On the occasion of World Biofuel Day, PM Modi dedicated the 2G Ethanol Plant in Panipat, Haryana to the nation. The PM pointed out that due to the mixing of ethanol in petrol, in the last 7-8 years, about 50 thousand crore rupees of the country have been saved from going abroad and about the same amount has gone to the farmers of our country because of ethanol blending.