‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

May 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The future of farming lies not merely in "Produce More,” but in "Produce Better": PM Modi at FAO

May 20th, 11:00 pm

Accepting the Agricola Medal for 2026 from the FAO, PM Modi said the recognition reflected India’s commitment to human welfare, food security and sustainable development. He dedicated the honour to Indian farmers and the country’s agricultural scientific community. He also highlighted initiatives such as ‘Per Drop More Crop’, micro-irrigation and precision farming, which are guiding India’s agricultural policies.

ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது

May 20th, 10:55 pm

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Prime Minister praises Sikkim’s extraordinary biodiversity during visit to Gangtok Orchidarium

April 28th, 03:15 pm

During his visit to the Orchidarium in Gangtok, PM Modi admired Sikkim’s extraordinary biopersity and described the experience as mesmerising, noting that such conservation efforts reflect India’s deep-rooted harmony with nature and inspire citizens towards environmental protection and sustainable living.

PM to visit Uttarakhand and UP on 14 April

April 13th, 04:11 pm

PM Modi will visit Uttarakhand and Uttar Pradesh on 14 April 2026. He will travel to Saharanpur in Uttar Pradesh to review the wildlife corridor on the elevated section of the Delhi-Dehradun Economic Corridor. During the visit, he will also perform Darshan and Pooja at the Jai Maa Daat Kali Temple and inaugurate the corridor in Dehradun. The ₹12,000 crore, 213-km-long, six-lane access-controlled corridor will play a pivotal role in strengthening regional economic growth.

பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை

March 05th, 08:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.

பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் சாரி-தாந்த் ஆகிய இடங்களில் புதிய ராம்சர் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு பிரதமர் வரவேற்பு

January 31st, 10:52 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள சாரி-தாந்த் ஆகியவை ராம்சர் தளங்களாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களுக்கும், ஈரநிலப் பாதுகாப்பு மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த திரு மோடி, இத்தகைய அங்கீகாரங்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று கூறியுள்ளார்.

Our goal must be to make natural farming a fully science-backed movement: PM Modi in Coimbatore, Tamil Nadu

November 19th, 07:01 pm

During the inauguration of the South India Natural Farming Summit 2025 in Coimbatore, Tamil Nadu, PM Modi hailed the city as a power centre of South India’s entrepreneurial strength. He said India is steadily emerging as a global hub for natural farming. Highlighting that farmers have received assistance of over ₹10 lakh crore this year through the Kisan Credit Card (KCC) scheme alone, the PM urged farmers to adopt “one acre, one season” of natural farming.

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்

November 19th, 02:30 pm

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பு வகிப்பது, இந்த நகருக்குக் கூடுதல் சிறப்பைத் தருவதாக அவர் கூறினார்.

புதுதில்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

August 07th, 09:20 am

எனது அமைச்சரவை சகா திரு சிவராஜ் சிங் சௌஹான், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், சுவாமிநாதன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு இருப்பதையும் நான் காண்கிறேன். அவர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விஞ்ஞானிகள், சிறப்பு விருந்தினர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே!

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்

August 07th, 09:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் சுவாமிநாதன் அறிவியலை பொதுச் சேவைக்கான ஊடகமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலும் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது சீரிய சிந்தனைகள் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று பிரதமர் கூறினார். எம் எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

August 06th, 12:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) காலை 9 மணிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

உலக அரங்கில் இந்தியக் கலாச்சாரத்தை ஊக்குவித்ததற்காக ஜெர்மன் பாடகி காஸ்மேக்கு பிரதமர் பாராட்டு

March 18th, 03:25 pm

இந்தியக் கலாச்சாரத்தை உலக அரங்கில் ஊக்குவிப்பதற்காக ஜெர்மன் பாடகி காஸ்மே பிரதமருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக வன உயிரின தினத்தையொட்டி நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

March 03rd, 08:37 am

உலக வன உயிரின தினத்தையொட்டி இன்றைய நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை

October 25th, 08:28 pm

புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.

ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

October 25th, 11:20 am

இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 09th, 01:50 pm

எங்களை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள். இதற்கு தலை தாழ்ந்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் மக்களின் இந்த அன்பும், பிணைப்பும் எனது மிகப்பெரிய சொத்து. இன்று, அசாம் மக்களுக்காக 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியம் தொடர்பானவை. இந்தத் திட்டங்கள் அசாமின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அசாம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ. 17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

March 09th, 01:14 pm

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளை உள்ளடக்கியது.

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

February 29th, 09:35 pm

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறுத்தைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, பல்லுயிர் பெருக்கத்திற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 26th, 04:12 pm

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.