மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

February 08th, 02:48 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர்.