India is not only the custodian of the sacred relics of Bhagwan Buddha, but also a living carrier of that timeless tradition: PM Modi
January 03rd, 12:00 pm
PM Modi inaugurated the Grand International Exposition of Sacred Piprahwa Relics related to Bhagwan Buddha, highlighting his close connection with Buddhist pilgrim sites. The PM noted that wherever the sacred relics of Bhagwan Buddha travelled in recent months, waves of faith and devotion were witnessed. Listing various initiatives undertaken by the government to preserve Buddhist heritage, he highlighted that Pali has been accorded the status of a classical language.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
January 03rd, 11:30 am
புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற இடம்பெயரும் உயிரினங்கள் பற்றிய உடன்படிக்கைக்கான 13-வது மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 17th, 01:37 pm
மகாத்மா காந்தியின் பூமியான காந்தி நகரில் நடைபெறும் இந்த இடம்பெயரும் உயிரினங்கள் பற்றிய உடன்படிக்கைக்கான 13-ஆவது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.வனவிலங்குகளில் இடம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான 13வது மாநாட்டினை காந்தி நகரில் பிரதமர் தொடங்கி வைத்தார்
February 17th, 12:09 pm
வனவிலங்குகளில் இடம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான 13வது மாநாட்டினை காந்தி நகரில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்தியா-ஸ்ரீலங்கா உறவில் பெளத்தம் எப்போதும் மங்காத ஒரு ஒளியை அளிக்கிறது: பிரதமர் மோடி
May 12th, 10:20 am
ஸ்ரீலங்கா, வேஸக் தின கொண்டாட்டத்தில், பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் போதனைகள் எவ்வாறு ஆளுமையில், கலாச்சாரத்தில் மற்றும் தத்துவத்தில் வேரோடி இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு பேசினார். “விலைமதிப்பில்லாத புத்தர் மற்றும் அவரின் போதனைகளை உலகத்துக்கு பரிசாக அளித்துள்ள இந்த பகுதி ஆசிர்வதிக்கப்பட்டதாகும்,” என்றார் பிரதமர்.ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்
April 30th, 11:32 am
இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.