செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் ஒடிசாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்

September 26th, 09:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், ஜார்சுகுடாவில் ஏறத்தாழ ரூ.60,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வின்போது அவர் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். இந்தத் திட்டங்கள் தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வீட்டுவசதித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன.