புகழ்பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான அந்தே ஸ்ரீ-ன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 10th, 03:02 pm

புகழ்பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான அந்தே ஸ்ரீ- ன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது கலாச்சாரம் மற்றும் அறிவுசார் அம்சங்களில் தவிர்க்க முடியாத சிந்தனைகளை அந்தே ஸ்ரீ விதைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது சிந்தனைகள் தெலங்கானா மாநிலத்தின் ஆன்மாவாக பிரதிபலிக்கிறது. புகழ்பெற்ற கவிஞராகவும் சிந்தனையாளராகவும் இருந்த அவர், மக்களின் நலனுக்காக அவர் ஆற்றி சேவைகள் என்றென்றும் நினைவில் நிற்கும்.