புது தில்லியில் அகில பாரத மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

February 21st, 05:00 pm

மதிப்பிற்குரிய மூத்த தலைவர் திரு சரத் பவார் ஜி, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜி, அகில பாரதி மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர். தாரா பவால்கர் ஜி, முன்னாள் தலைவர் டாக்டர். ரவீந்திர ஷோபனே ஜி, அனைத்து மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், மராத்தி மொழி அறிஞர்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளே,

98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 21st, 04:30 pm

புதுதில்லி விஞ்ஞான் பவனில் 98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மராத்தி மொழியின் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு அனைத்து மராத்தியர்களையும் வரவேற்றார். அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு ஒரு மொழி அல்லது பிராந்தியத்துடன் நின்றுவிடவில்லை என்று கூறிய அவர், இந்த மாநாடு சுதந்திரப் போராட்டத்தின் சாரத்தையும், மகாராஷ்டிரா மற்றும் தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது என்று கூறினார்.

98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாட்டை தில்லியில் பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார்

February 20th, 07:30 pm

அண்மையில் மராத்திய மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட உள்ள 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாட்டை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (21-ம் தேதி) பிற்பகல் நான்கரை மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.