மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 17th, 11:20 am

அறிவின் கடவுளும், தார் போஜ்சாலாவின் அன்னையுமான வாக்தேவியின் பாதங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இன்றைய தினம் திறன் மற்றும் கட்டுமானத்தின் கடவுளான பகவான் விஸ்வகர்மாவின் பிறந்த தினமாகும். பகவான் விஸ்வகர்மாவுக்கு நான் தலைவணங்குகிறேன். விஸ்வகர்மா ஜெயந்தி விழாவான இன்று தங்களின் திறன்கள் மூலம் தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை மிகுந்த மதிப்புடன் நான் வணங்குகிறேன்.

மத்தியப் பிரதேசத்தின் தாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்

September 17th, 11:19 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார். படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.